Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவர் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசு அதிகாரிகள் சார்பில் பொது மக்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது
இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் தனியார் கல்லூரி சார்பில் பொதுமக்கள் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட பேரணியின் முடிவில் உறுதியாக வாக்களிப்போம் , கையூட்டு பெற்றுக் கொண்டு வாக்களிக்க மாட்டோம் என மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.